முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் மனுவை தமிழக அரசு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 35 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கக்கோரி கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். ஆனால், அந்த மனுவை கடந்த 2021ல் தமிழக அரசு நிராகரித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து, தன்னை சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கக்கோரி ராஜன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஒஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை என்பதாலும், அவரின் சிறை நன்னடத்தையை கருத்தில் கொண்டும் மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசிடம் வைத்த கோரிக்கையை 3 வாரத்துக்குள் மீண்டும் மறுபடியும் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அண்மைச் செய்தி : நண்பர் பில்கேட்ஸ் உடன் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சந்திப்பு

அதேவேளையில் அந்த இடைப்பட்ட காலத்தில் மனுதாரரை உரிய முகாமிற்கு மாற்றவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம்

இந்திய கலாச்சாரத்தின் மீது காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? – மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி

Jeni

விராட் கோலி, சுப்மன் கில் சதம் – இலங்கைக்கு  391 ரன்கள் இலக்கு

Web Editor