முஸ்தபிசூர் ரகுமான் நீக்கம் எதிரொலி ; ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப வங்கதேசத்தில் தடை….!

முஸ்தபிசூர் ரகுமான் நீக்கப்பட்டத்தை அடுத்து ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப வங்கதேசம் தடை விதித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வருவதாக கூறி கொல்​கத்தா அணி​யில் இடம்​பெற்​றிருந்த முஸ்தபிசூர் ரகுமானை நீக்​கவேண்​டும் என்று பாஜக, சிவசே​னா, இந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பிசிசிஐ உத்​தர​வின் பேரில் முஸ்தபிசூரை கொல்கத்தா அணி நிர்​வாகம் விடு​வித்​து​விட்​டது. கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்​தில் ரூ.9.20 கோடிக்கு கேகேஆர் நிர்​வாகம் எடுத்​திருந்​தது.

கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தபிசூர் ரகுமான் நீக்கப்பட்டதற்கு வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் இந்​தி​யா, இலங்​கை​யில் நடை​பெறவுள்ள ஐசிசி டி20 உலகக்​கோப்பை தொடரில் பங்​கேற்க இந்​தி​யா​வுக்கு வங்​கதேச அணி வராது என்​றும் தொடரில் வங்​கதேச அணி விளை​யாடும் போட்​டிகளை இந்​தி​யா​வுக்கு வெளியே பொது​வான மைதானத்​தில் நடத்​து​மாறும் ஐசிசிக்கு அந்​நாட்டு கிரிக்​கெட் சங்​கம் கடிதம் எழு​தி​யுள்​ளது.

இந்த சூழலில், ஐபிஎல் 2026 தொடரின் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு  வங்கதேசம்  தடை விதித்துள்ளது. இது தொடர்பாக  வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொல்கத்தா அணியிடம் 2026 ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தபிசூர் ரகுமானை விடுவிக்குமாறு கூறியுள்ள பிசிசிஐ அதற்கு எந்த விதமான “தர்க்கரீதியான காரணத்தையும்” தெரிவிக்கவில்லை. பிசிசிஐ -யின் அத்தகைய முடிவு வங்காளதேச மக்களை வருத்தப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வங்க தேசத்தில், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அனைத்து போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவு முறையான அதிகாரியின் ஒப்புதலுடனும் பொது நலனுக்காகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது”என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.