புலியின் சிற்பத்தை மணலில் தத்துருவமாக உருவாக்கி கடலூர் மாணவர்கள் அசத்தல்

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கடலூரில் பள்ளி மாணவர்கள் புலியின் மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர். உலக காடுகள் அழிவுகளை தடுக்க வலியுறுத்தியும், பல வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை  தடுக்க வேண்டும் என்பதை விளக்கும்…

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கடலூரில் பள்ளி மாணவர்கள் புலியின் மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

உலக காடுகள் அழிவுகளை தடுக்க வலியுறுத்தியும், பல வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை  தடுக்க வேண்டும் என்பதை விளக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3 ம் தேதி வன விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கடலூர் அரசு பள்ளி மாணவர்கள் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய விலங்கான புலியின் உருவத்தை மணலில் தத்துருவமாக வரைந்துள்ளனர்.

சுமார் 5 அடி அகலுமும், 2 அடி உயரமும் உடைய புலியின் சிற்பம் செயின்ட் டேவிட் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காண்போரை வியப்பில் ஆழ்த்தும் இச்சிற்பத்தை ஏராளமான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.