முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த S.V.கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பணியாற்றி வந்த நிலையில், பம்பாய் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முன்னதாக பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 24 ஆம் தேதி, 8 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா பணி ஒய்வு பெற்றார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூக்கில் தொங்கிய நிலையில் ’கஞ்சானா 3’ நடிகை சடலமாக மீட்பு

Gayathri Venkatesan

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்: தெய்வத்தமிழ் பேரவை

Web Editor

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

EZHILARASAN D