தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கென்று ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகின.
அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்றான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது, சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைத்தல், முதலமைச்சரின் முக்கிய திட்டமான காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்தல் போன்ற எண்ணற்ற திட்டங்ளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்தார்.
Also Read: ‘கானல் நீர் தாகம் தீர்க்காது’- பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!
மேலும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்திற்கு 5,145 கி.மீ தூர சாலைகள் மேம்படுத்த ரூ.2,000 கோடி நிதியும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.16,262 கோடி ரூபாய் நிதியும், ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறைக்கு ரூ.22562 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கென்று ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு சிறப்பு திட்டங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதில் ரூ.1,200 கோடியில் பேருந்து பணிமனைகள் நவீனமயமாக்கப்படும். 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா