தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் போடி தொகுதியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றியுள்ளதாகக் அவரது மகன்கூறினார்.
ஆனால் வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என குறை கூறிவரும் தங்கதமிழ்செல்வனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என்றும் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்தார்.







