புதுச்சேரியில், கிராமப்புறங்களில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய தமிழ்நாட்டை சேர்ந்த 3 திருடர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
புதுச்சேரி-தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் உள்ள புதுச்சேரி காவல் நிலையங்களான
திருக்கானூர், திருபுவனை, நெட்டப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் கடந்த கோடை விடுமுறையின் போது பூட்டி இருந்த வீடுகளில் குறிவைத்து மர்ம கும்பல் ஒன்று தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் தினறி வந்த நிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி நெட்டப்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும், அவர்கள் தமிழகத்தில் பல்வேறு காவல்
நிலையங்களில் திருட்டு வழக்கில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல திருடன் அய்யனார் மற்றும் அவனது கூட்டாளிகளான தமிழரசன் மற்றும் ஸ்ரீநிவாசன் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் நெட்டப்பாக்கம் மற்றும் திருபுவனை காவல் நிலைய எல்லையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நிலையில், அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, அவர்களின் கைரேகை பரிசோதனை செய்ததில் திருக்கானூர் மற்றும் காட்டேரிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 5 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டத்தும் தெரியவந்தது, பின்னர் திருக்கானூர் போலீசார் அவர்கள் மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதில் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறையில் அடைக்கப்பட்ட மூவர் மீதும் நெட்டப்பாக்கம், திருபுவனை,
காட்டேரிக்குப்பம் மற்றும் திருக்கானூர் ஆகிய காவல் நிலையங்களில் 8 திருட்டு
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ரூபி.காமராஜ்