33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கண்களில் கருப்பு துணி கட்டி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம்..!

கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், மே 1ம் தேதியான இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் திருச்செந்தூர் அருகிலுள்ள மேல திருச்செந்தூர் ஊராட்சி மன்றம் சார்பில் அறிவித்தபடி கிராம சபை கூட்டம் நா.முத்தையாபுரத்தில் நடைபெறாததால், ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கண்களிலும், வாயிலும் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நா.முத்தையாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 4 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அங்கு அதிகாரிகள் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வராததை அடுத்து பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கண்கள் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் மீது, துணைத் தலைவர் முருகன் மற்றும் 4 வார்டு உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் திருச்செந்தூர் வட்டாட்சியர்
மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், நா.முத்தையாபுரத்தில் 12 ஆண்டுகளாக கிராம ஊராட்சி சபை நடத்தப்படவில்லை எனவும், இந்த ஆண்டு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் முத்தையாபுரத்தில் நடைபெறும் என அறிவித்திருந்த கூட்டம், எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென வேறு இடத்திற்கு
மாற்றபட்டதை கண்டித்து, ஊர் பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பபை ஏற்படுத்துகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading