கடந்த திமுக ஆட்சியில் மாணவர்கள் பசியின்றி பயில ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாண்வர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் மாணர்களுக்கு காலை நேரங்களில் உப்புமா, கிச்சடி, பொங்கல் மற்றும் கேசரி போன்ற ஆரோக்கியமான உணவுகள் வாரத்தின் 5 நாட்களுக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு காலை உணவுத்திட்டம் 8-அம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் இத்திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




