இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 18.01.2023 முதல் 19.01.2023 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்பேரில் சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் இயக்கப்படும் இடங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள். இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 18.01.2023 முதல் 19.01.2023 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்பேரில் சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
–மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்முடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.
–கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிச்சேரி,கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.வி.படேல் ரோடு. கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும்.
–தாம்பரம் மெப்ஸ் அண்ணா நிலையம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி,கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.
–தாம்பரம் இரயில்வே நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை,போளூர்,வந்தவாசி,நெய்வேலி,செஞ்சி,பண்ருட்டி.வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.
–பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி. ஆற்காடு திருப்பத்தூர். காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
–கோயம்பேடு பேருந்து நிலையத்திலுருந்து (CMBT) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, திருச்சி, செங்கோட்டை, தூத்துக்குடி. திருச்செந்தூர்,மதுரை, திருநெல்வேலி,நாகர்கோவில், கன்னியாகுமரி. விழுப்புரம். கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை. அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர். பேருந்துகள்.பொள்ளாச்சி, ஈரோடு. இராமநாதபுரம், சேலம்,கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என போக்குவரத்து காவல் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








