ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2-ஆம் தேதி 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜஸ்தானில் 9 பேருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 2 பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், இதுவரை 17 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அம்மாநிலத்தில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.