தேர்வு எழுதிவிட்டு வந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயத்துடன் மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது
செக்காரக்குடியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தேர்வு எழுதி விட்டு வந்த மாணவியை பள்ளி அருகே
வைத்து சோலையப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டி உள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
சேர்த்துள்ளனர்.
இதனையும் படியுங்கள்: காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் சோலையப்பனை தட்டப்பாறை காவல்துறையினர்
பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை இளைஞர் அறிவாளால் வெற்றியை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







