திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் இன்று தொடங்கி அடுத்த இரு தினங்களுக்கு நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைகால தொடக்கத்தில் திருப்பதி மலையில் வசந்த உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் திருப்பதியில் இன்று துவங்கியது. வசந்த உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயில் பின்பகுதியில் இருக்கும் வசந்த மண்டபத்தை தேவஸ்தான நிர்வாகம் அடர்ந்த வனப்பகுதி போல் கண்கவர் வகையில் அலங்கரித்துள்ளது.
வசந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தார். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து உற்சவர்கள் மாலை மாட வீதியில் வழியாக கோவிலை அடைந்தனர்.
வசந்த காலத்தை வரவேற்கும் நடைபெறும் வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை மீண்டும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்துள்ள உள்ளார். இன்று நடைபெற்றது போல் அபிஷேகம், தூப தீப,நைவேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடைபெறும்.
மூன்றாவது நாளான நாளை மறு நாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா
தேவி சமேத ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய
மூன்று யுக மூர்த்திகள் வசந்த மண்டபத்தில் எழுந்துள்ள உள்ளனர். அன்றைய தினம் அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் ஆகிய நடைபெறும். தொடர்ந்து மூன்று யுக கடவுளர்களும் மாலையில் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைவர்.







