பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையாருக்கு காட்சி கொடுத்தார். இதனையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும்…

அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையாருக்கு காட்சி கொடுத்தார். இதனையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாதம் இரண்டாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. திருக்கோவிலில் உள்ள நந்தி  பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழவகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திட்டு வாசற்படியில் சூரியனுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலின் கருவறை முதல் 1000 கால்மண்டபம் வரை உள்ள 5 நந்தி பகவானுக்கு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் காட்சிகொடுத்தனர். இதேபோல் இன்று ஒரு நாள் மட்டுமேமுப்பது முக்கோடி தேவர்களுக்கும் அண்ணாமலையார் காட்சி தருவார் என்பது ஐதீகம். இதனையடுத்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் மாடவீதியில் காலை முதல் மாலை வரை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி காட்சியளிப்பார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை 7 மணி அளவில் திருவூடல் நிகழ்வு திருவூடல் வீதியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.