குடிக்க பணம் இல்லாததால் கோவில் உண்டியலில் திருடிய 2 பேரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எடையார்பாக்கத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலை திறந்த பூசாரி கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் அருகில் உள்ள வீடுகளின்
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடிவந்தனர். அந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மர்மநபர்கள்
இருவர் இப்பகுதியில் சுற்றி வந்ததை சிசிடிவி-யில் கண்ட போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்த சாரதி மற்றும் பேரம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் என்பது தெரிய வந்தது மேற்படி இருவரையும் போலிசார் விசாரித்ததில் குடி போதையில் இருந்ததாகவும், குடிக்க பணம் தேவைப்பட்டதால் எல்லையம்மன் கோவில் உண்டியலில் இருந்து 1000
ரூபாய் மட்டும் திருடியதாகவும் இளைஞர்கள் ஒப்பு கொண்டனர். சாரதி மற்றும் சதிஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலிசார் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
குடிக்க பணம் இல்லாமல் கோவில் உண்டியலில் திருடி இருவர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்
அவர்கள் திருடிவிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.