பிரபல ரவுடி படப்பை குணா சரணடைந்தார்

பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்ப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன.…

பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்ப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன. இவர் வெகுநாளாக தலைமறைவாகியிருந்த நிலையில், குணாவை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தது. இதனை அடுத்து அவரது மனைவி எல்லம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது கணவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாகக் கூறிய அவர், படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடையும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து எல்லம்மாளின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் படப்பை குணா சென்னை சைதாப்ப்பேட்டை நீதிமன்றத்தில் தற்போது சரணடைந்துள்ளார்.

இந்நிலையில், இவர் மதுரமங்கலம் பகுதியில் ஆக்கிரமித்து வைத்திருந்த 5 ஏக்கர் நிலத்தை காஞ்சி மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு மீட்டது.

மேலும், பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்தது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விவகாரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேஷ்வரி, ஶ்ரீபெரும்பத்தூர் ஆய்வாளராக பணியாற்றிய ராஜாங்கம் மற்றும் மணிமங்கலம் ஆய்வாளரான பாலாஜி ஆகிய மூன்று காவல் ஆய்வாளர்களை தெற்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறபித்து உள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.