முக்கியச் செய்திகள்செய்திகள்

ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா மற்றும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களுடன் ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் இன்று ராம்ராஜ் காட்டன்,  ஆச்சி மசாலா நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த 37 நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளான நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி,  1 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலமாக 18,420 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6,180 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் கோத்ரேஜ் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

குவால்காம் நிறுவனத்துடன் 177 கோடி ரூபாய் மதிப்பிலும்,  ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  இதே போல் தமிழ்நாட்டில் டாடா பவர் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 55 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உலகத் தொழிலாளர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக ரிலையன்ஸ் அதிபர் அம்பானி கொண்ட நிலையில் அந்நிறுவனம் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளது.

இந்நிலையில், தற்போது ரூ.1,75,000 லட்சம் கோடி மதிப்பிலான எரிசத்தி துறை சார்ந்த 37 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.  இதன் வாயிலாக, 12,567 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதே போன்று, ராம்ராஜ் நிறுவனம் ஜவுளித்துறையில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.  இதன் வாயிலாக 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.  ஆச்சி மசாலா நிறுவனத்தை பொறுத்தவரை 100 கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமம் 42,768 கோடி முதலீட்டிறகான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  இதன் மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘feng tag’ காலணி தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்யவுள்ளது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் 2-வது நாளில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதன் மூலம் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அம்மாவின் திறமையை பகிர்ந்து, நம்மை குழந்தையாக மாற்றிய மஹுவா மொய்த்ரா MP – வைரல் வீடியோ

Web Editor

5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Web Editor

அமைச்சர் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கு: மன்னிப்பு கோர உத்தரவு!

Arivazhagan Chinnasamy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading