முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

உசிலம்பட்டி அருகே வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி, நரியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளை கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்தனரா, கிராம புற பகுதிகளில் வெளி நபர்கள் யாரும் வலம் வருகின்றனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொயின் அலி ஓய்வு

EZHILARASAN D

வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை தமிழகம் வருகை!

Niruban Chakkaaravarthi

சிலிண்டருக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை தெரிவித்த எம்.பி

Janani