ஆஸ்கர் விருது வென்றதற்காக RRR படக்குழுவினரைத் திரைப் பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் நிலையில் RRR படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜெய் ஹிந்த்’ என ட்வீட் செய்துள்ளார்.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் கச்சிதமான நடனத்தால் உலகளாவிய நாட்டு நாட்டு பாடல் பிரபலமாக மாறியது. இந்தப் பாடலுக்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் பாடல் எழுதியுள்ளார், மேலும் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆஸ்கர் விருதுக்குள் நுழைவதற்கு முன், ஜனவரி மாதம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதையும், சிறந்த பாடலுக்கான விமர்சகர்களின் சாய்ஸ் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றது. சில நாட்களுக்கு முன்பு, ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் நடனப் பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.
இந்தப் பாடல் இந்தியில் நாச்சோ நாச்சோ என்றும், தமிழில் நாட்டுக் கூத்து என்றும், கன்னடத்தில் ஹல்லி நாடு என்றும், மலையாளத்தில் கரிந்தோல் என்றும் வெளியிடப்பட்டது. அதன் இந்தி பதிப்பை ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் விஷால் மிஸ்ரா பாடியுள்ளனர். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நிகழ்த்திய ஹூக் ஸ்டெப், சமூக ஊடகங்களில் வைரலானது.
தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் இடம் பெற்றது. இந்நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. இதன் மூலம் இந்தியாவில் முதல் முதலாக ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வென்ற படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
Jai Hind 🇮🇳
— rajamouli ss (@ssrajamouli) March 13, 2023
ஆஸ்கர் விருதை வென்றதற்காக RRR படக்குழுவினரைத் திரைப் பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் நிலையில் RRR படத்தின் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜெய் ஹிந்த்’ என ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.