அமெரிக்காவின் 245வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1776ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. இதன் 245வது ஆண்டு தினம் இன்று (ஜூலை 4) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 245வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜோ பைடனுக்கும், அமெரிக்க மக்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆற்றல் மிகுந்த ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் சுதந்திரத்தின் மதிப்புகளை பகிர்ந்துகொள்வதாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.