சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அணிவகுப்பை முதமைச்சர் விஜய் ஏற்றார். தொடர்ந்து அவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் லோகோவை வெளியிட்டார். மேலும் படைக்கான ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்தார். ரோந்து வாகனத்தை முதலமைச்சர் விஜய் இயக்கியும் பார்த்தார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான ஐஜியாக பவானிஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.




