தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ம.நீ.ம கட்சியால்தான் முடியும்: ச.மீ. ராசகுமார்!

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் நீதி மய்யத்தால் மட்டுமே முடியும் என, அக்கட்சியின் காரைக்குடி தொகுதி வேட்பாளர் ச.மீ. ராசகுமார் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மற்றும் திமுகவிற்கு வாக்களித்தவர்கள்…

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் நீதி மய்யத்தால் மட்டுமே முடியும் என, அக்கட்சியின் காரைக்குடி தொகுதி வேட்பாளர் ச.மீ. ராசகுமார் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மற்றும் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் அவர்களது கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்களுக்கு மாற்று நாங்கள்தான், அதனால்தான் பெரிய கட்சிகள் எங்களை இணையம் வழியாக பல்வேறு பொய் செய்திகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என அவர் கூறினார்.

மேலும், காரைக்குடி தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன் என்றும், காரைக்குடி தொகுதிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்படும், நாங்கள் செய்த பணிகளை பார்த்து மக்கள் எங்களை நம்புகின்றனர் என அவர் தெரிவிதார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.