மார்ச் -8 உலக மகளிர் தினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி அளிப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர அரசு பெண்கள் பாதுகாப்புக்காக வடிவமைத்துள்ள ‘திஷா’ செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள் மகளிர் தினத்தன்று வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடியை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்கள், மால்களில் இந்த தள்ளுபடி சலுகையைப் பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு அன்றைய தினம் விடுப்பு எடுத்துக்கொள்ளவும் அலுவலகம் செல்லும் பெண்கள் மாதத்தில் கூடுதலாக ஐந்து நாட்கள் விடுப்பு (CL), அங்கன்வாடிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குச் சிறப்பு மருத்துவ பரிசோதனை. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் என பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்பை ஜெகன்மோகன் ரெட்டி மகளிர் தினத்தன்று வெளியிடுகிறார்.
இதுமட்டுமல்லாது பெண்கள் மற்றும் மாணவிகளின் மாதவிடாய் நாட்களில் சுகாதாரத்தைக் கணக்கில் கொண்டு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தையும் ஜெகன்மோகன் ரெட்டி மார்ச் -8 மகளிர் தினத்தன்று தொடங்கிவைக்கிறார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.