ஆந்திராவில் இருந்து போலியான வாகன எண்ணை பயன்படுத்தி தூத்துக்குடிக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரகசியமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் இளம் சிறார்களை குறி வைத்து மிகப்பெரிய அளவிலான கும்பல் ஆந்திராவில் இருந்து மூட்டை, மூட்டையாக கஞ்சாவை கடத்தி வந்து சிறிய பொட்டலங்கள் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க காவல் துறை சார்பாக கஞ்சா வேட்டை4.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் மதுரை காவல் ஆணையாளர் நரேந்திரன் நாயர் உத்தரவின்பேரில் சட்டவிரோத போதைப்பொருட்கள் விறபனையை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் மதுரை சுற்றுவட்டார காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய ராஜ்குமார் மற்றும் ஜெ.கே என்பவர்களை தேடி வந்தனர்.அப்போது மதுரை ரிங்க்ரோடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் சுமார் 40 கிலோ மதிப்பிலான கஞ்சா கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காரை ஓட்டி வந்த ராஜ்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் அவருடைய கூட்டாளிகளான ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுகுமாறன், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா, சுடலைமணி, மகேஸ்குமார் மற்றும் முத்துராஜ் ஆகியோருடன் சேர்ந்து மதுரை புதூரை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலம் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி போலியான பதிவெண் உடைய வண்டியில் கஞ்சாவை கடத்தி வந்ததும், அதனை தூத்துக்குடி மாவட்டம் வேலவன்புதுக்குளம் என்ற கிராமத்தில் ராஜா என்பவரின் தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.மேலும் அதிலிருந்து 40 கிலோ
கஞ்சாவை மதுரைக்கு எடுத்து வந்து விறபனைக்கு ஈடிபட முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், 3 செல்போன்கள்,
மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ்
வழக்குபதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வேலவன் புதுக்குளம் கிராமத்தில் ராஜா என்பவரின் தென்னந்தோப்பிற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் 2ஆயிரம் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இதனை கைப்பற்றிய போலீசார் அங்கிருந்து தப்பிக்க முயன்ற சுகுமாறன்,ராஜா, சுடலைமணி,மகேஸ்குமார்,. முத்துராஜ் ஆகிய 6பேரையும் கைது செய்து விசாரணை
நடத்தினர்.
அப்போது மதுரையை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலமாக ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து 4 கோடி மதிப்பில் 2090 கிலோ கஞ்சா வாங்கி
வந்து, தூத்துக்குடி ஆரோன் என்பவர் மூலம் கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து
வருவதாகவும், மேலும் இந்த கஞ்சாவினை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளனர். இதனையடுத்து கஞ்சா ஏற்றி வைத்திருந்த சரக்கு வாகனங்கள், 5 செல்போன்கள் ,25ஆயிரம் ரொக்க பணம் ஆகிவற்றை கைப்பற்றினர்.
பின்னர் சுகுமாறனிடம் தனியே போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து போலியான நம்பர் பிளேட்டை பயன்படுத்தி கஞ்சா ஏற்றி வந்த வாகனத்தை கோச்சடை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார்.
இதனையடுத்து அந்த சரக்கு வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர். இந்த கஞ்சா வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டதோடு,விற்பனைக்கு பயன்படுத்த இருந்த 2090 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்கள், ஒரு கார், 8 செல்போன்கள் மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ-25ஆயிரம் ரூபாய் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான JK என்ற ஜெயக்குமார் மற்றும் ஆரோன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.







