26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பசியாற்றும் பிட்சா ஹீரோ!

இந்தியா தற்போது கொரோனா தொற்று நோயால் மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இதன் காரணமாக ஊரடங்கு முறையை கடைபிடித்து வருகிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.


கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவில் கன மழை பெய்து வரும் நிலையில் டொமினோஸ் பிட்சா ஊழியரின் செயல் இணைதளத்தில் அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.இந்த லாக்டவுன் காலகட்டத்தில் மக்கள் வெளியே செல்வதும், உணவகங்களுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் உணவு வீடு தேடி வருவது பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. உணவகங்கள் இந்த நிலையிலும் மக்களின் உணவுத்தேவைகளை உணவின் தரம் மற்றும் சுவை குறையாமல் வழங்கிவருவது மிகவும் பாராட்டுதற்குரியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இவ்வாறு இருக்கையில் டொமினோஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்கில் தங்களின் ஊழியர் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவை கொடுப்பதற்கு முட்டியளவுக்கு மேல் உள்ள தண்ணீரில் கடும்மழை வெள்ளத்தை பொருட்படுத்தாது பீட்சா பேக்குடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை அந்நிறுவனம் பகிர்ந்து பாராட்டியுள்ளனர். இந்த பதிவு ட்விட்டரில் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

அரிக்கொம்பன் வருகையால் பிரபலமான முத்துகுழி வயல்

Web Editor

பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தானை விமர்சித்த இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்!

Web Editor

சச்சின், டிராவிட், தோனி வரிசையில் சாதனை புரிய காத்திருக்கும் விராட் கோலி!

Web Editor