சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர் அஞ்சலையம்மாள் – தவெக தலைவர் விஜய் புகழாரம்…..!

சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாளின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,

”வீரத்திற்கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர், “தென்னாட்டின் ஜான்சி ராணி”, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர், சமூக சேவகர், தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினமான இன்று, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினேன்.

சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர்! நீராதாரத்திற்காகப் போராடியவர், போராட்டக் களத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று அன்றே நிரூபித்தவர்.

தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் வழியில், தீய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க உறுதியேற்போம்!”’

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.