ரயில்வே ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகளுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பீகார் சட்டமன்ற வளாகத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே லட்டுக்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
கடந்த 2004-2009 காலகட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தவர்
லாலு பிரசாத் யாதவ். அதே காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக அவரின் மனைவி ரப்ரி தேவி இருந்தபோது நிலம் வழங்கினால் ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும் எனக் கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக, ரயில்வே துறையில் பணி பெற்ற நபர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமோ
அல்லது அவர்களாகவோ லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மிக மிக
குறைந்த விலையில் நிலத்தைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இது மிகப்பெரும் முறைகேடு ஆகும். இதனால், பல தகுதியுள்ள நபர்கள் பாதிப்படைந்துள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உட்பட 16 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, ராகினி யாதவ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, வழக்கின் விசாரணை முழுமை அடைவதற்கு முன்பாகவும், எந்த கைது நடவடிக்கையும் செய்யாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லாலு பிரசாத் தரப்பு கூறி ஜாமீன் வழங்க கோரியது.
இதனையும் படியுங்கள்: ரயில்வே ஊழல் வழக்கு – லாலு பிரசாத் யாதவ், மனைவி, மகளுக்கு ஜாமீன்
இதனை ஏற்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி
ராப்ரிதேவி, மகள் ராகினி யாதவ் உள்ளிட்ட அனைவரும் தலா 50,000 ரூபாய் பிணை
தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ ஒருவர் பீகார் மாநில சட்டமன்றத்தில் லட்டுக்களை வழங்கினார். இதனையடுத்து ஆர்ஜேடி மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் பீகார் மாநில சட்டமன்றம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்ஹா இது குறித்து தெரிவித்ததாவது..
பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் இங்குதான் இருந்தோம். ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ-க்களுக்கு வழி விட்டோம். ஆனால் அவர்கள் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். லட்டுகளை வழங்குகிறோம் என்ற பெயரில் எங்கள் மீது சரமாரியாக இனிப்புகளை வீசுகிறார்கள். அவர்கள் எங்களை தொந்தரவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் செல்ல உள்ளோம் “ என தெரிவித்தார்.
– யாழன்