கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தடுப்பு நடவடிக்கையாகத்
தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு கடந்த 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின்போது தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளி மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான, பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கும், இரவு நேர ஊரடங்கின்போது அனுமதியில்லை, என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. அவசர மருத்துவ தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல், இரவு நேரங்களில் ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி அளிக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் கொடைக்கானலில் அனைத்து வணிகர்கள் கடையடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காததால் சுற்றுலா சார்ந்த உணவகம், தங்கும் விடுதி தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என 50,000க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள சுற்றுலாப் பயணிகள் வருகை தடையை நீக்கி, கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.