முக்கியச் செய்திகள்தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் நேற்று முன்தினம் (ஜூன் 19) உயிரிழந்தனர். நேற்று (ஜூன் 20) மேலும் 19 பேர் இறந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் இன்று (ஜூன் 21) உயிரிழந்தனர். இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது. மேலும், 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் (38) என்பவர் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.  இத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 4 பெண்கள் உட்பட 51 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் அருந்தியவர்களில் சேலம் அரசு மருத்துவமனையில், மேலும் 30 பேர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பெங்களூரு அணிக்கு 160 ரன்கள் இலக்கு..

G SaravanaKumar

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?-அமைச்சர் சிவசங்கர் பதில்

Web Editor

திருமணம் செய்து வைக்குமாறு சண்டையிட்ட மகனை கொலை செய்த தாய்!

Jayapriya

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading