விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. கடந்த 14ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  திமுக சார்பில் அன்னியூர் சிவா,  பாமக சார்பில் சி.அன்புமணி, …

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.

கடந்த 14ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  திமுக சார்பில் அன்னியூர் சிவா,  பாமக சார்பில் சி.அன்புமணி,  நாம் தமிழகர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இன்று மதியம் 3 மணியோடு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில்,  இதுவரை 64 வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும்.  மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால்,  அதன் பிறகு வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.  தொடா்ந்து, ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.  ஜூலை 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பபட உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.