வெனிசுலா நிலநடுக்கம் – 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

வெனிசுலா நிலநடுக்கத்தில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இவை வெனிசுலா நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்படாத நிலநடுக்கங்களாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் சரிந்துள்ளன. சாலைகள் சேதமடைந்து நாட்டின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெனிசுலாவின் முக்கிய விமான நிலையமான மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது. நிலநடுக்க பேரழிவு காரணமாக அந்நாட்டு தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் வெனிசுலாவில் இந்த பேரிடரால் உயரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 589ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2980-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிந்த கட்டிடங்களில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.