குளித்தலை அருகே, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரை சேர்ந்த குரு பிரகாஷ் (19) அய்யர்மலையில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கணிதம் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இவரது பெரியப்பா மகன் விக்னேஷ் (16) வைபுதூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ யில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வந்தார்.
இந்நிலையில் குரு பிரகாசுக்கும் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கும் கடந்த ஆறு மாத காலமாக காதல் இருந்து வந்ததாகவும் கடந்த ஒரு மாதமாக இருவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் கல்லூரி மாணவி கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண் (21), என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குரு பிரகாஷ் மீண்டும் கல்லூரி மாணவியிடம் போன் செய்ததை கல்லூரி மாணவி ஆட்டோ ஓட்டுநர் அருணிடம் சொல்லவே, கடந்த 14 ம் தேதி அருண், குருபிரகாசிடம் எப்படி நீ போன் செய்யலாம் என கேட்டு வாய் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் குருபிரகாஷ், அருண் தம்பி சங்கர் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் செல்லதுரை ஆகியோா் கல்லூரிக்குள் வந்து அருணிடம் மன்னிப்பு கேட்டு வந்துவிடலாம், என அழைத்தபோது குருபிரகாஷ் மறுக்கவே சம்பவ இடமான அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் குரு பிரகாஷ்யின் பெரியப்பா மகனான விக்னேஷ் அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் மற்றும் கல்லூரி மாணவர்வா்கள் நான்கு போ் குரு பிரகாஷையும், விக்னேஷையும் கல்லாலும், குச்சியாலும் அடித்துள்ளனர்.
இந்நிலையில் காயம் அடைந்த இருவரையும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுப்பி, முதலுதவி சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக விக்னேசை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்த நிலையில் குருபிரகாஷ் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
மேலும் குளித்தலை போலீசார் விக்னேசை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ குட்டப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண், மற்றும் அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் செல்லதுரை, சரவணன், விஜயபாரதி, சந்தோஷ் குமார் ஆகிய 5 பேரை கைது செய்து குளித்தலை குற்றவியல் நடுவர் எண் ஒன்றில் நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி ஐந்து பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
—-ரூபி.காமராஜ்







