1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்

ஓசூரில் திருமண அழைப்பிதழில் 1330 திருக்குறள் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயரை அச்சிட்டு புதுமண தம்பதிகள் அசத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61).  இவர் முன்னாள்…

ஓசூரில் திருமண அழைப்பிதழில் 1330 திருக்குறள் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயரை அச்சிட்டு புதுமண தம்பதிகள் அசத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61).  இவர் முன்னாள் பஞ்சு ஆலை தொழிலாளி இவரது மனைவி ரெங்கநாயகி(55) அரசுபள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு குயில்மொழி, முகிலன் என
மகள்,மகன் உள்ளனர்.  முகிலன் அயர்லாந்து நாட்டில் பணிபுரிகிறார் மார்ச் மாதம் 10-ம் தேதி முகிலனுக்கும்,சேலம் மாவட்டம் சின்னதிருப்பதியை சேர்ந்த நித்யசுபாசினி என்பவருக்கும் சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி திருமண ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.  திருமண அழைப்பிதழை எல்லோருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என ரவீந்திரன்
யோசித்துள்ளார். அந்த வகையில் உலக பொதுமறை திருக்குறளை அதற்கு விளக்க
உறையுடனும் மற்றும் ஆண், பெண் குழந்தைகளின் ஒரு லட்சம் தமிழ் பெயர் கொண்ட 2
புத்தகத்துடன் திருமண அழைப்பினை இணைக்க முடிவு செய்து பின்னர் புத்தகத்தின்
முதல் பக்கத்தில் மணக்கள் பெயர், திருமணம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட
விபரங்கள் அடங்கிய திருமண அழைப்பிதழ் அச்சிட்டுள்ளார்.

280 பக்கங்கள் கொண்ட வகையில்  இந்த திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 புத்தக திருமண அழைப்பிதழை அச்சிட்டுள்ளனர். அதே போல் மற்றோர் புத்தகத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஒரு லட்சம் தமிழ் பெயர் இடம் பெற்றுள்ளது.

அவை 256 பக்கங்கள் உள்ளது. அதில் நமது குடும்பம் தமிழ் நெறி குடும்பமாக
விளங்க நம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டவேண்டும், நம்முடைய பெயர்
பிறமொழியில் அமைந்திருந்தால் அனை தமிழ்படுத்திக்கொள்ளவும், அனைத்து இடங்களிலும் தமிழிலியே கையெழுத்திட வேண்டும், அனைத்து கல்வி துறையிலும் தமிழ் வாயிலாக படிக்க வேண்டும், திருமணம் உள்ளிட்ட இல்ல சடங்குகளை தமிழிலேயே நடத்த வேண்டும், திருக்குறளை வாழ்வியல் நூலாக கடைபிடிக்க வேண்டும் என அச்சிட்டிருந்தனர்.

இதனையும் படியுங்கள்:  ராஜபக்ச சகோதரர்கள் கமிஷன் கேட்டனர் – விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவைச் சேர்ந்த தயா மோகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அந்த குடும்பத்தினர் வழங்கி
வருகின்றனர் திருமண அழைப்பிதழ் வெறும் காகிதமாக இருக்கமால் மற்றவர்களுக்கு
பயன்படும் வகையில் புத்தக அழைப்பிதழ் வழங்கும் இந்த குடும்பத்தின் முயற்சித்தது அனைவராலும்  பாராட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து ரவீந்திரன் தெரிவித்ததாவது..

“சிறுவயதிலிருந்து தமிழ் மீதும் திருக்குறள் மீது பற்று அதிகம் இதனால் நான் திருவள்ளூவர் இலக்கிய மன்றம் என வைத்திருந்தோம். தற்போது தனது மகன் திருணத்திற்கு அழைப்பிதழ் பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்து எனது நண்பர்கள் தமிழ்முகிலன் , நற்றேவன் ஆகியோர் ஆலோசனைபடி, திருக்குறள் உரை புத்தகம் மற்றும் தமிழ் பெயருடன் இரு புத்தகங்களுடன் திருமண அழைப்பிதழ் சென்னையில் 500 புத்தகங்கள் அச்சிட்டேன்.

ஒரு திருமண அழைப்பிதழ் புத்தகத்தின் விலை ரூ.450 செலவானது அதே போல் புத்தக அழைப்பிதழ் மட்டுமின்றி அதனை வழங்க பயன்படும் தாம்புல பையில் ஒரு புறம் மணமக்கள் பெயரும், மறு பக்கம் திருவள்ளூவர் உருவம் அச்சிட்டுள்ளோம் இந்தத் துணிப்பை சுற்றுச்சூழல் மாசு ஏற்பாடுத்தாத வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமணம் தமிழ்நெறி திருமணம் முறையில் நடைபெற உள்ளது. தமிழ் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல ஆண்டு காலங்கள் ஆனாலும் இந்த திருமண அழைப்பிதழ் புத்தம், வீடுகளின் அலமாரிகளில் அலங்கரிக்கும்” எனவும் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.