30.9 C
Chennai
June 25, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

INDvsAFG: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்ற இந்தியா!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இந்திய அணியை பொறுத்தவரை சென்னை சேப்பக்கத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்திய – ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. எனவே இந்தியாவிற்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.  இன்றைய போட்டியில் 272 ரன்கள் குவித்ததன் மூலமாக ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக ரன்கள் குவித்துள்ளது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இந்தப் போட்டியின் மூலமாக உலகக்கோப்பை போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் அதிக சிக்சர்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தினார் ரோகித் சர்மா.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார். இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் விராட் கோலி 55 ரன்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 25 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 131 ரன்கள் எடுத்திருந்தார்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். ஆப்கன் தரப்பில் ரஷீத் கான் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading