முக்கியச் செய்திகள்தமிழகம்ஹெல்த்செய்திகள்

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த 23-ம் தேதி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது.  ஆனால் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் 8 வயது சிறுவன் உட்பட 32 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 25 பேரும்,  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும்,  விருதுநகரை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு ராஜாஜி மருத்துவமனையை பொறுத்தவரையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 70 முதல் 100க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.  இந்த பரிசோதனையில் டெங்கு பாதிப்பு உரிய பரிசோதனை செய்து கண்டறியப்பட்டு டெங்கு வார்டுக்கு மாற்றப்படுகின்றனர்.

இந்நிலையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி மதுரை மாநகராட்சி ஊழியர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்

Web Editor

மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது!

Web Editor

புதுப் பொலிவுடன் பாரிசின் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் – டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading