25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் விரோத செயல்கள் தொடர்ந்தால், அதிமுக போராட்டமும் தொடரும் – இபிஎஸ் அறிக்கை!!

தமிழ்நாட்டில் மக்கள் விரோத செயல்கள் தொடரும் பட்சத்தில் திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விஷச்சாரய மரண விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, உள்ளிட்டவற்றை
கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தவிர அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திமுக அரசிற்கு எதிராகவும் முதலமைச்சர் பதவி விலக கோரியும், அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??

இந்த ஆர்ப்பாடங்களுக்கு ஏற்பாடு செய்து பங்கேற்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்நாட்டில் ஊழல்களும், மக்கள் விரோத செயல்களும் தொடரும் பட்சத்தில் அதிமுகவின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!

Gayathri Venkatesan

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை

Halley Karthik

ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2ம் பாகம் எப்போது? ராஜமௌலி வெளியிட்ட புதிய தகவல்

Jayasheeba