31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

“நான் பதவி விலகத் தயார்” ஆனால்… நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மேற்கு வங்க மக்கள் கூறினால் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் ஆனால், மமதா பானர்ஜி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாளன்று பதவி விலக தயாராக இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் அங்கு தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஐந்தாவது கட்டமாக 45 தொகுதிகளுக்கு வரும் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பரப்புரை வரும் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பாஜக தலைவர்களும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடக்கு 24 பாரகனா மாவடத்தில் உள்ள பாணிஹதி பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேரணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து பசிர்ஹத் தக்ஷன் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், மமதா பானர்ஜி தன்னை பதவி விலகும்படி தொடர்ந்து கோரிகைக விடுத்துவருவதாக சுட்டிக்காட்டினார்.

மேற்கு வங்க மக்கள் சொன்னால் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், மமதா பானர்ஜி வரும் மே 2 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாளன்று பதவி விலக தயாராக இருக்க வேண்டும் என்றும் அமித்ஷா திட்டவட்டமாக கூறினார

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

அசத்திய கூல் கேப்டன்; இறுதிப்போட்டியில் சென்னை

G SaravanaKumar

வாக்குப்பதிவு முன்னிட்டு கொடைக்கானில் அரசு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன!

Halley Karthik

கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

EZHILARASAN D