புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று 7 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. சுமார் 100 இடங்களில் நடத்தப்படும் தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று மாநிலம் முழுவதிலும் 7 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 212 நபர்களும், காரைக்காலில் 765 நபர்களும், ஏனாமில் 109 நபர்களும், மாகேவில் 56 நபர்களும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர், மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒவ்வாமை போன்ற எவ்வித எதிர்வினையும் வரவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.







