சிறு வயதில் தன் தந்தையால் பாலியல் ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளானதாக நடிகை குஷ்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு, அரசியலுக்குள் நுழைந்த குஷ்பு காங்கிரசை தொடர்ந்து பா.ஜ.கவில் இணைந்தார். அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினராகவும் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
”வீ த விமன்” நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷ்பு சிறுவனோ, சிறுமியோ, குழந்தையோ பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் அதன் தாக்கம் வாழ்க்கை முழுவதும் பயமுறுத்திக் கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.
இதனையும் படியுங்கள்: பெண்கள் சுதந்திரமாக பேசுவதே முன்னேற்றம் – குஷ்பு பேச்சு
தன் மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவராக தன் தந்தை இருந்ததாகவும், தனக்கு எட்டு வயது இருக்கும்போது பாலியல் ரீதியாக தன்னை அவர் துன்புறுத்தியதாகவும் குஷ்பூ தெரிவித்தார். மேலும், தனது குழந்தைப் பருவம் மிக மோசமானதாக இருந்ததாகவும் அதை எதிர்த்துப் போராடும் தைரியமும் நம்பிக்கையும் தாம் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தந்தையின் பாலியல் தொந்தரவு இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்து, 15 வயதில் தந்தைக்கு எதிராகப் பேசத் தொடங்கினேன். ஆனால் தனக்கு 16 வயது ஆவதற்குள் அவர் தங்களை விட்டுச் சென்றதாகவும், அடுத்த வேளை உணவுக்குக்கூட என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வந்ததாகவும் குஷ்பூ வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
– யாழன்