வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளன. தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.







