தமிழ்நாட்டில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 46 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 583 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 88 ஆயிரத்து 775 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் உயிரிழந் துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள் ளது.
சென்னையில் புதிதாக 127 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 157 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவையில் 175 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கும் சேலத்தில் 107 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேருக்கும் தென்காசியில் 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.