தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, 25 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது. புதிதாக 24 ஆயிரத்து 405 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 24 ஆயிரத்து 405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 72 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்றில் இருந்து குணமடைந்து 32 ஆயிரத்து 221 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 18 லட்சத்து 66 ஆயிரத்து 660 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் களில், 460 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர். 3595 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி யுள்ளனர். செங்கல்பட்டில் 983 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 492 பேருக்கும் திருவள்ளூரில் 695 பேருக்கும் திருச்சியில் 823 பேருக்கும் கோவையில் 2980 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.