ஓமலூர் அருகே வனப்பகுதியில் தீ – அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசம்

ஓமலூர் அருகே , லோக்கூர் வனப்பகுதியில் தீ பரவியதால் அரிய வகை மூலிகைகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்காவை சேர்ந்த , டேனிஸ்பேட்டை வனச்சரகத்திற்கு சொந்தமாக லோக்கூர்…

ஓமலூர் அருகே , லோக்கூர் வனப்பகுதியில் தீ பரவியதால் அரிய வகை மூலிகைகள் எரிந்து சேதமடைந்தன.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்காவை சேர்ந்த , டேனிஸ்பேட்டை வனச்சரகத்திற்கு சொந்தமாக லோக்கூர் வனகண்டா மலை , டேனிஸ் பேட்டை வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது கோடை காலத்திற்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால் வனப்பகுதியில் புற்கள், செடி , கொடிகள் அனைத்தும் காய்ந்து காணப்படுகிறது.

இதைத்தொடர்ந்து லோக்கூர் வனப்பகுதிக்கு உட்பட்ட, லோக்கூரியிலிருந்து டேனிஸ்பேட்டை இடையே உள்ள வனப்பகுதியில் தீப்பற்றி எரிவதாக, காடையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் , காடையாம்பட்டி தீயணைப்பு நிலையை அலுவலர் ராஜசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்க முற்பட்டனர்.

மேலும் , தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீச்சி அடித்து, தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தின் காரணமாக , வனப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகைகள் உள்ளிட்ட பல வகை செடிகள் எரிந்து சேதமானது. மேலும், வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.