முக்கியச் செய்திகள் தமிழகம்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து; 4 பேர் பலி

நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வரும் தில்லைக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இதில் மூதாட்டி பெரியக்காள் (73), தில்லை பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் தில்லைகுமார் உயிரிழந்தனர்.

 

வீட்டின் கட்டிட இடுபாட்டிற்குள் சிக்கி தில்லைகுமார் மனைவி பிரியா, தாய் செல்வி ஆகியோர் உயிரிந்தனர். மேலும் இந்த விபத்துக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

EZHILARASAN D

மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கைவினை மற்றும் உணவு கண்காட்சி

Web Editor

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

Gayathri Venkatesan