மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக்குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.