’ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கானது அல்ல’ – அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தல், எங்களுக்கான தேர்தல் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த…

ஈரோடு இடைத்தேர்தல், எங்களுக்கான தேர்தல் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”இலங்கையில் 13வது சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக பாஜகவின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இலங்கையில் சூழல் மாறிக்கொண்டு இருக்கிறது.

இலங்கை சென்ற போது, அதிபர் ரணில் விக்கரமசிங்கேவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். வெளியுறவத்துறை அமைச்சரை சந்தித்து இலங்கையில் வருவாய், போலீஸ் அதிகாரத்துடன் கூடிய 13வது அட்டவணையை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

ஈரோடு இடைத்தேர்தல், எங்களுக்கான தேர்தல் இல்லை. அசுர பலம், பண பலம், படை பலம், ஆள் பலம், எல்லாவற்றிக்கும் மேலாக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடிய திமுகவை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால், ஒரு வலிமையான பொது வேட்பாளர் நிற்க வேண்டும். ஓரிரு நாட்கள் பொறுமையாக இருங்கள்.

கூட்டணி பெயரை ஏன் மாற்றினார்கள் என்பதை அதிமுகவினரிடம் தான் கேட்க வேண்டும். காலையில் இருந்த கூட்டணி பெயர் 6 மணி நேரத்தில் எப்படி மாறியது என்று தெரியவில்லை. என்.டி.ஏ தான் கூட்டணி. அதிமுக மூத்த நிர்வாகிகள் என்னிடம் பேசும் போது அச்சுப்பிழை என்றார்கள். மோடி படம் இல்லை என்பதை பேனர் வைத்தவர்களிடம்
தான் கேட்க வேண்டும். நிறைய பேர் களத்தில் வேட்பாளர்களை நிறுத்துக்கின்றனர். எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பதில் விரைவில் சொல்லப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.