தனித்தமிழில் பெயர் சூட்டினால் எந்த மதத்தையும் அடையாளப்படுத்த முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முனைவர் க.தமிழமல்லன் எழுதிய தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு புத்தக வெளியீட்டு விழா லாஸ்பேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டார். விழாவில் ரவிக்குமார் எம்.பி உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய திருமாவளவன், “ தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடியிருக்க வேண்டும். மொழிப்பற்று என்பது மொழியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்க வேண்டும் . தமிழ் மொழியை பற்றி பேசுபவர்கள் உணர்ச்சி வயப்பட்டு உள்ளனர். பேசும் மொழி தமிழாக இருந்தால் தமிழ் பற்றாளன் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழியை எப்படி பார்க்கிறோம் என்ற புரிதல் இருக்க வேண்டும்.தமிழ் மொழிக்கு வரலாறு தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வருகிறது. தமிழை காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழனை காப்பாற்ற வேண்டும் .ஆனால் பிறமொழியை எதிர்க்கவில்லை அந்த மொழி பேசுபவர்களின் ஆதிக்கத்தை தான் எதிர்த்து போராடுகின்றோம்” என்று தெரிவித்தார். மேலும், “மொழி அழிக்கப்பட்டால் இனம் அழிக்கப்படுகின்றது என்ற கோட்பாட்டோடு பார்க்க வேண்டும். சமஸ்கிருத எதிர்ப்பு என்றால் மொழி எதிர்ப்பு அல்ல, அந்த மொழியை உயர்த்தி பேசுபவர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் கோட்பாடாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் தேசியம் என கூறிக்கொண்டு உணர்ச்சிவயப்பாட்டோடு இல்லாமல் கோட்பாட்டோடு செயல்படவேண்டும்” என்று பேசிய திருமாவளவன், “சாதி அடிப்படையில் ஆட்சிக்கு வருபவர்களால் வேறு எந்த சாதியினருக்கும் தீர்வு கிடைக்காது. அவர் தனித் தமிழில் பெயர் சூட்டினால் மதத்தையும் அடையாளப்படுத்த முடியாது, சாதியையும் அடையாளப்படுத்த முடியாது. ஆகவே தனித்தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.