தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு காந்தி மண்டபத்தில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.







