டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பாஜக எம்எல்ஏ முஸ்லிம் வியாபாரிகளை மிரட்டினாரா? உண்மை என்ன?

டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்தர் சிங் நேகி விற்பனையாளர்களிடம் அவர்களின் மதம் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

Did the BJP MLA threaten Muslim traders after winning the Delhi elections? What is the truth?

This News Fact Checked by ‘Newsmeter

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்தர் சிங் நேகி தெருவோர வியாபாரிகளின் மதம் குறித்து கேள்வி எழுப்புவதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விற்பனையாளர்களிடம் அவர்களின் பெயர்கள் மற்றும் மத அடையாளத்தை நேகி கேட்கிறார்.

“பர்பத் கஞ்ச் பாஜக எம்எல்ஏ ரவீந்திர சிங், வெற்றி பெற்ற ஒரு நாள் கழித்து, கடைகள் முன் அடையாள அட்டைகளை வைக்குமாறு வர்த்தகர்களை எச்சரிப்பதைக் காணலாம்!!” என்ற தலைப்புடன் ஒரு பேஸ்புக் பயனர் வீடியோவை பகிர்ந்துள்ளார் (கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) (காப்பகம்).

இதே போன்ற பதிவுகளை இங்கே காணலாம். (காப்பகம்)

உண்மைச் சரிபார்ப்பு:

இந்தக் கூற்று தவறானது என கண்டறியப்பட்டது.

வைரல் காணொளியின் கீஃப்ரேம்களை தலைகீழ் படத் தேடியபோது, ​​டிசம்பர் 8, 2024 தேதியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.

பாஜக கவுன்சிலர் ரவீந்தர் சிங் நேகி முஸ்லிம் விற்பனையாளர்களைத் துன்புறுத்தி வருவதாகவும், வகுப்புவாத வெறுப்பைப் பரப்பியதற்காக டெல்லி காவல்துறை அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தப் பதிவு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், ஒரு முக்கிய வார்த்தை தேடலில், டிசம்பர் 9, 2024 அன்று வெளியிடப்பட்ட தி ட்ரிப்யூனின் அறிக்கை கிடைத்தது, அதில் அதே காணொளி குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, நேகி முஸ்லிம் விற்பனையாளர்களை அச்சுறுத்தியதாகவும், அவர்களின் பெயர்களைக் காட்டும்படி கட்டாயப்படுத்தியதாகவும் சிபிஎம் குற்றம் சாட்டியது. நேகி இந்து கடைக்காரர்களுக்கு காவி கொடிகளை விநியோகிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, டிசம்பர் 8, 2024 அன்று பகிரப்பட்ட jist.news என்ற Instagram பக்கத்தில் இதே போன்ற ஒரு காணொளி காணப்பட்டது.

டிசம்பர் 3, 2024 அன்று டெல்லியின் வினோத் நகரில், இந்து காய்கறி விற்பனையாளர்களின் வண்டிகளில் நேகி காவி கொடிகளை வைப்பதைக் காட்டும் வீடியோ எடுக்கப்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, டெல்லியில் பாஜக வெற்றி பெற்ற பிறகு அந்த வீடியோ எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.