நாட்டின் ஏழைகளை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் கட்சி கொள்கையாக கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தியாவில் 9 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதை, நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்கான சேவை, நல்ல ஆட்சி நிர்வாகம், ஏழைகளின் நலனுக்காகவே பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சி அர்ப்பணிக்கப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரிமோட் ஆட்சியை நடத்தி வந்த காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஊழலும், பெருநகரங்களில் பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள் : “அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்!!” – அமைச்சர் துரைமுருகன்
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்து, நாட்டு மக்களின் உணர்வுகளையும், 60 ஆயிரம் தொழிலாளார்களின் உழைப்பையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.







